பாஸ்கா காலம் - உயிர்ப்பின் 6-ம் ஞாயிறுஎன் நண்பர்கள்…!.தி.ப10:25-26 34-35 44-48 1யோவா4:7-10 யோவா15:9-17
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
இறைதிருவிருந்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். .
அன்னைமார்களின் தினமான இன்று நம் தாய்மார்களுக்கு நன்றிகூறி. .
அம்மா என்ற மொழியோடு விசுவாச பாடம்புகட்டி பாதைகாட்டிய. .
அவர்களன்பு நம்மில் தொடர்ந்து பிறரில் வளர வரம்கேட்டு இணைவோம். .. .
நாலுபேர் இணைந்து ஊர்சுற்றி புரட்சிசெய்வது நட்பு அல்ல. .
நாலுசுவற்றிற்குள் உட்கார்ந்து நாற்பது பேருடன் பேஸ்புக்கிலும். .
நம் அடையாளம் தெரிவிக்காது செய்யும் சேட்டிங்கும் நட்பு அல்ல. .
காரியம் ஆவதற்கு துணைபோவதுபோல் சின்னத்திரை தொடர்களிலும். .
கானாபாட்டோடு வண்ணத்திரையில். நாம் காண்பது நட்பு அல்ல. .
துணையாக பலமாக பலமுமாக தோளாக இருப்பதே தோழமை. .. .
இயேசு தன்நீணட இறுதிஉரையில் பாடமாக பகிரங்கமாக பகிர்கிறார். .
முன்செல்லும் வழிகாட்டி அல்ல நான் பயிற்றுவிக்கும் குரு அல்ல நான். .
மரமாக கிளையாக இணைந்து இருங்கள் என்னில் நிலைத்து இருங்கள். .
அன்பே ஆணிவேராக அமையட்டும் அடையாளமுமாக காணப்படட்டும். .
அடிபணியும் பணியாளராக அல்ல ஆர்வமிகு சீடராக அல்ல நீங்கள். .
அனைத்துமாக அடியேனின் பிரியமிகு என்றும் பிரியா என் நண்பர்கள். .. .
திருத்தூதர்களில் இறுதியாக இயற்கையாக முதிர்ந்த வயதில் இறந்தயோவான். .
நினைவுகுறைந்து பார்வைமங்கி இறைச்சமூகத்தில் கூடியபோதெல்லாம். .
நிலையாக உறுதியாக சொன்னவார்த்தைகள் பிறரை அன்புசெய்யுங்கள் என்பதே. .
முதல் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்கள் விசுவாசிகள் புனிதர்கள் என்றும். .
இறைவனின் அடிமைகள் கிறிஸ்துவின் அடிமைகள் எனவும் அழைக்ப்பட்டனர். ..
இக்கூற்றுக்கு பதிலாக நாங்கள் இயேசுவின் இணைந்த நண்பர்கள் என்கிறார். . .. .
அபிரகாமும் மோசேயும் இறைவனின் நண்பர்களாக அணுகப்பட்டதை. .
2குறிப்பேடு20:7 வி.ப33:11-12 ஏசாயா41:8 நமக்கு எடுத்துக் கூறுகிறது. .
பேதுருவும் முதல்வாசகத்தில் இருமுறை மறுத்தும் தொடர்ந்து தளராது. .
தன்காலில் விழுந்த நூற்றுவதலைவன் கொர்னேலியுவை தோள்தொட்டு. .
நானும் உன்போன்று மனிதன் நாம் இயேசுவின் நண்பர்கள் ஆவோம் என. .
குடும்பமாக திருமுழுக்குபெறுவது புறஇனத்து மக்களுக்கு சிறந்து சாட்சியே. .. .
இயேசுவின் நட்பு எந்நாளும் எத்தருணத்திலும் உடன்இருப்பது. .
இக்கட்டான சமயங்களில் தோள்கொடுத்து இணைந்திருப்பதாகும். .
உலகம் முடியும்வரை எந்நாளும் உங்ளுடன் உடன் இருப்பேன். .
உலகின் இறுதிஎல்லை வரை நற்செய்தியும் இறையரசும். .
பரந்து பகிரப்பட்டு கட்டப்படட்டும் நான் உடன் இருப்பேன் என்ற. .
புனிதர்கள் மறைசாட்சிகள் உணர்நது அனுபவித்த நட்பு இது. ..
தாய்மார்கள் தினமான இன்று நம்முதல் நட்பு நம் அன்னைதான். .
நம் அனைவரின் முழுமையான நட்பு. நம் இயேசு இறைமகனே. .
பதினெட்டு வருடங்களாக இதயத்தில் தாங்கி நினைவில் நிறுத்தி. .
பரமன் பாதத்தில் பற்றி வேண்டியதன் பலனே அகுஸ்தீனாரின் புதியவாழ்வு. .
அவரின் திருமுழுக்கு நிறைவின்பொழுது அவர் மனம்நிறைந்து சொன்னது. .
இதயம் முழுமைபெற்றாகிவிட்டது நான் இறைவனோடு இணைய தயார். .. .
தன்னைமறந்து தன் பிள்ளையை நினைப்பவள் தாய். .
தன்பிள்ளையின் கடந்தகாலத்தை ஏற்று இன்றையநாளில் புரிந்து. .
நாளைய நாளிலும் நம்புபவள் அன்னையவளே. .
தனித் தாயாக போரடும் அனைவருக்கும் இறைத்துணை வேண்டுவோம். .
நம் என்றும் இயேசுவின் நண்பர்கள் என உடன்செல்வோம்.பலரும் .
நண்பர்களாக உருவாக விசுவாசத்தில் உயர்வாக பணிதொடர்வோம்-ஆமென். .. .
|