பெரிய வெள்ளி – புனித வாரம் அனைத்தையும் தாங்குவதே…… அன்பு!
பாடலாசியர் சிலுவையை அன்பின் கவிதையாக பார்க்கிறார்……
தச்சு தொழிலாளி இரு பெரிய மரக்கட்டைகளாக பார்க்கிறார்….
யூதர் சிலுவையை அவமானத் தண்டடையாக பார்க்கிறார்…
ஒவ்வொரு புனிதரும் வேதச்சாட்சியும் சிலுவையை பார்த்தது
அன்போடு எதையும் தாங்கும் சக்தியாக……
இதற்குமேல தாங்கும் சக்தியில்லை……
என்நோயை…வலியை…ஏமாற்றத்தை
இதுக்குமேல நம்மாள தாங்கமுடியாது….
என் வேலையை…..பொறுமையை…..காத்திருத்தலை..
என்க்கு இனிமேல ஒத்துவராது பிரிந்துவிடுவது மேல்……
என் மனைவியிடமிருந்து….என் பெற்றோர்களிமிருந்து..
தாங்கமுடியாது என்பது என் பதிலா அல்லது முடியாது
தாங்க விரும்பவில்லையா….தாங்க மனதில்லையா?
உனக்காக நான்..நீங்கள் எனது மக்கள் என்று
தெரிந்தெடுத்து வழிநடத்தி விடுதலைபெற்ற மக்கள்
மாறினர் மனம் வாழ்வு முறையற்றுபோனது
அழிவுகளை சந்தித்தனர் அடையாளம் இழந்தனர் .
அவமதிப்புகுள்ளான ஆலயமும் அழகு இழந்தது
எருசலேம் எதிரி கோட்டையானது
துன்பம் துயரம் தோல்வி தடுமாற்றங்கள்
வலிகள் வியாதிகள் பிரிவுகள் இிழப்புகளை
தாங்க இயலாது தவித்தது மனிதம்
அன்பு சட்டத்துக்குள் அடைக்கப்பட்டது
மதம் பதவியிலிருப்போருக்கு விலைபேசப்பட்டது
தாங்கும் சக்தியாக தாங்குவதே முழு அன்புஎன
சிலுவையில் காவியமானார் இயேசு
சிலுவை அவரை தாங்கவில்லை அவர் சிலுவையைதாங்கினார்.
பழிச்சொல்லை…..குற்றச்சாட்டை அவமானத்தை….ஏமாற்றத்தை
காட்டிகொடுக்கப்பட்டதை…..மறுக்கப்பட்டதை
தாங்கினார் தன் மனதால் அன்பால் உடலால் உள்ளத்தால்
மூன்று ஆணிகளால் பதமாக்கப்பட்டதை மூன்று மணிநேரமாய்
முழுஉலகம் மறந்ததை தேடிவந்த மனிதம் மறுத்ததை
தாங்கினார் தாங்குதே அன்பு என்பதை செயலாக்கினார்.
நாம் தாங்க தயாரா…….அன்பினால் தாங்குவோம்….அன்போடு தாங்குவோம்
நம் போராட்டங்களை…நம் வலிகளை….நம் நோய்களை….
நம் எதிர்ப்புகளை….நமது ஏமாற்றங்களை….நமது சவால்களை…
தாங்குவோம்….தாங்கும் சக்தி சிலுவையிலும் சிலுவை நாயகனிலும்
என்றும் பெற்றுக்கொள்வோம்…..
அன்பு எதையும் தாங்கும்………
|