பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு தலைமைத்துவம் சாலமோனின் ஞானம் 2:17-20
யாக்கோபு 3:16 4:3
மாற்கு 9:30-37
இறைமகன் இயேசு கொடுக்கும் தலைமைத்துவம்
“ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்”
கடந்த வார நற்செய்தியிலும், இன்றைய நற்செய்தியில் இயேசு தன் பாடுகளை பற்றி சீடர்களிடம் அறிவிக்கின்றார். ஆனால் அவர்களிடையே போட்டி மனப்பான்மை மேலோங்குகிறது. இயேசுவிற்கு பின் யார் தலைவராவது?
அன்பிற்கு பொருள் கொடுக்கும் யோவானா
வயதில் மூத்த அந்திரேயாவா
அனுபவத்தில் உயர்ந்த பேதுருவா
ஆசையில் மயங்கிய யூதாசா
ஆளுமையில் சிறந்த மத்தேயுவா
அறியாமையில் திகழ்ந்த பிலிப்புவா
ஆண்டவரின் உறவினர் என்ற உரிமையில் யாக்கோபா
வினாக்களை எழுப்பும் ததேயுவா
தீவிரவாதி என்ற சீமோனா
தடுமாற்றம் கொண்ட தோமாவா
அர்ப்பண வழியில் செல்லும் பர்த்தலமேயுவா
பதவி ஆசையில் இருக்கும் தம் சீடர்களை பார்த்து கூறினார்:
சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.
சிறுபிள்ளை போல் அன்பு, கபடற்றதன்மை, எதார்த்தம், கொண்டவர்களாகவும், ஒரு தலைவருக்குள்ள வாழ்வை வாழ்ந்து காட்டும் (இறைமகன் இயேசு) எனது மனநிலையை பெற்று வாழுங்கள் என வாழ்ந்து காண்பிக்கிறார். நம்மையும் பார்த்து பணிக்கிறார். ஆகவே நாம் தலைமைக்கு போட்டி போடாமல் தொண்டு செய்திட முனைவோம். ஆமென்.
|