இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Alexander Mariadass
Rome, Italy



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)











பொதுக்காலம் 18 ஆம் ஞாயிறு

தாண்டிவிடு...தேங்கிவிடாதே... Keep moving forward


விடுதலைப்பயணம். 16: 2-4,12-14
எபேசியர 4: 17,20 – 24
யோவான் 6: 24-35




இயேசுவிடம் மக்கள் செல்கிறார்கள்!! ஆனால் வெறும் உணவுக்காக... ஆனால் இயேசு சொல்லுகிறார்...உணவுக்காக அல்ல மாறாக வாழ்வு தரும் உணவுக்காக வாழுங்கள். வாழ்விலும் ஒரே இடத்தில்...ஒரு சின்ன இலட்சியத்தோடு இருந்துவிடாமல்...புதிய மாற்றங்களை படைப்பவர்களாக வாழ்வோம்...