ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.


இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 3

எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர், இறைப்பற்றுக் கொண்டவர். இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.(லூக்கா:2:25-26) [2014-05-25 22:27:25]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்

அன்பின் இதயம்

இதயம் என்றால் உயிர், இயக்கம், உணர்வு இருக்கும். இப்படி இன்னும் மனிதவாழ்க்கைக்கு தேவையான எல்லா மதிப்பீடுகளையும் தன்னகத்தே கொண்ட இதயம் தான் இயேசுவின் திரு இருதயம், அன்னை மரியாவின் வியாகுல இதயம். இவ்விரண்டும் நம்மை காக்கும், நம்மை வழிநடத்தும், நம்மை அன்பு செய்யும் இதயம். [2014-05-22 22:34:19]

எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி ஷர்மிலா ரோசரி ப்ரியா FSAG

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன?
பாகம் -ஆறு

என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன? இந்த கேள்விக்கு நம்மில் பலரும் பல்வேறு பதில்கள் தருகின்றோம். எ.கா: கடவுள் தான் என் வாழ்வின் ஆதாரம் எனது பெற்றோர் தான் என் வாழ்வின் ஆதாரம்: என் பிள்ளைகள் தான் எனக்கு ஆதாரம்: என் தன்னம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம்; இவ்வாறு பல்வேறு விளக்கங்களை நம் வாழ்வில் கேட்டிருக்கின்றோம் [2014-05-13 21:00:18]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 2

இறைவனின் நியமங்களையும் நீதிநெறிகளையும் கவனமாய்ச் செயல்படுதுத்தியவர்கள்தான் திருமுழுக்கு யோவானின் பெற்றோர்கள். இறைவன் அவர்களுக்கு புதிய இதயத்தையும், புதிய ஆவியையும் கொடுத்து ஆண்டவரின் வழியை செம்மைப்படுத்த, ஆண்டவரின் பார்வையில் பெரியவராய், தூய ஆவியால் முற்றிலும் அபிசேகம் பெற்றவரை உலகிற்கு கொண்டு வந்தார்கள். செக்கரியா, எலிசபெத்தின் வாழ்க்கையில் தூய ஆவியார் எவ்வாறு செயல்பட்டார் என்று சிந்திப்போம். [2014-04-22 21:51:25]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
என்னைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?
பாகம் -ஐந்து

என்னைப் பற்றி நான் என்ன தெரிந்து கொள்ளவேண்டும்? காலையில் எழுகின்றேன், பகல் முழுவதும் உழைக்கின்றேன், இரவு படுக்கைக்கு செல்கின்றேன். குடும்பத்திற்காக உழைப்பதற்கே நேரம் போதவில்லை, இதில் என்னைப்பற்றி நான் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன். எனது பிள்ளைகளின் வளர்ச்சி தான் என் வளர்ச்சி. அதற்காக என்னைப் பற்றி நான் ஏன் கவலைபட்டு என் நேரத்தை செலவிட வேண்டும் என்று அறிவு பூர்வமாக பதிலளிப்பது போல் சில நேரங்களில் நாம் நினைக்கின்றோம். [2014-04-08 22:05:00]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD

மனம் திறந்து
திருத்தந்தை பிரான்சிஸ் உடனான ஒரு சிறப்பு நேர்காணல்.
பாகம் 1

யார் இந்த ஜாஜ் மரியோ பெர்க்கோலியோ?

யார் இந்த ஜார்ஜ் மரியோ பெர்க்கோலியோ? என்று வெள்ளந்தியாக இந்தக் கேள்வியைக் கேட்டேன். கேட்ட பிறகு, அவர் என்னை அமைதியாக என்னை கூர்ந்துப் பார்த்தார் உடனே நான் “இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?” என்று அவரிடம் கேட்டேன். கேட்கலாம் என்று தலையாட்டிக்கொண்டே பதில் சொல்ல ஆரம்பித்தார். “ இதற்குப் பொருத்தமான விளக்கமாக எது இருக்கும் என்று எனக்குத் தெரியாது...ம்.. ம்..ம்.. நான் ஒரு பாவி. இதுதான் ஒரு மிக துல்லியமான வரையறையாக இருக்க முடியும். [2014-03-22 11:52:15]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஞானி ராஜ் லாசர் (குடந்தை ஞானி)

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 1

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.(மத்தேயு:3:11) [2014-03-15 02:02:35]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி

நான் தனியாக இருக்கிறேன், ஆனால் தனிமையில் இல்லை
[செபம்]

"செபிக்கும் கிறித்தவர்கள் தனிமையில் இல்லை" என்கிறார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட். கடவுளின் மகனாய் இருந்தபோதும் கூட இயேசு செபிப்பதை விடவில்லை. அப்பாவோடு உரையாடுவதை, உறவாடுவதை மகன் இயேசு தொடர்ச்சியாக செய்தார். [2014-02-20 23:17:22]

எழுத்துருவாக்கம்:அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
நான் யார்?
பாகம் நான்கு

3ம் பாகத்தில் குறிப்பிட்டது போல்: சாட்சிய வாழ்வுக்கு அடிப்படையான அம்சங்களை புரிந்துகொள்ள முயற்சிப்போம். முதல் கேள்வி நான் யார்? இந்த கேள்வியை வரலாற்றில் பல தத்துவ ஞானிகள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் தங்களுக்குள் கேட்டதால் தான் பல முன்னேற்றங்களை இந்த உலகம் அடைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் மனிதனை பலவிதங்களில் வரையறுத்து கூறுகின்றனர். [2014-01-18 11:59:31]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD

நாம் தேடுகிறவர் எங்கே?

காரிருளில் வாழ்ந்து வந்த மக்கள் போரொளியைக் காண்பர் என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இறைமகன் இயேசுவில் நிறைவேறிற்று. பல ஆண்டுகளாக அடிமைத்தனத்திலும், வறுமையிலும், வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்களின் அழுகுரலைக் கேட்ட கடவுள். என் மக்களின் விடுதலைக்காய் யாரை நான் அனுப்புவேன் என கடவுள் ஏங்கினார். [2013-12-30 15:31:42]

எழுத்துருவாக்கம்:அருள்பணியாளர் அமல்ராஜ் ஆரோக்கியம்

பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்