இவ்வாண்டும் எமது மாநிலம் வழங்கியுள்ள உத்தரவுகளின்படி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒழுங்கு விதிகளையும் கவனத்துடன் பணியகம் மேற்கொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டுளதுடன். இப்புனிதப் பயணத்தில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் பணியகத்தினாலும் நகர நிர்வாகத்தினாலும் விடுவிக்கப்படும் ஒழுங்கு விதிகளை அக்கறையுடன் பின் பற்றி, புனிதப் பயணம் சிறப்பாகவும் அமைதியாகவும் இடம் பெற ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டப் படுகின்றீர்கள். கேவலார் புனித பயணத்தின் போது சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்:
1. புனிதத்தலத்திற்கு சொந்த வாகனங்ககளில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் நீச்சல் தடாகத்திற்கு அணமையாக இலவசமாக ஒழுங்கு
செய்யபட்டுள்ள வாகனதத் தரிப்பிடத்தில் தமது வாகனங்களை நிறுத்துமாறு கேடகப்படுகினறனர்.
இவ் வாகனத் தரிப்பிடம் சிறப்பாக தமிழ் புனிதப் பயணிகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதுடன் இவ்விடத்தில் ஒரு கழிவறையும்
பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத் தரிப்பிடத்திற்குச் செல்வதற்கான வழிகளை கேவலாருக்கு நுழையும் வீதிகளில் தமிழில் கண்டு
கொள்ளலாம்.
2. கடந்த காலங்களில் பலர் பிழையான இடங்களில் தமது வாகனங்ககளை நிறுத்திதியதால் ஏற்பட்ட பிரச்சினைகளைஸ் சுட்டிக் காட்டி, இனிமேல்
இப்படிப் பிழையாக நிறுத்தப்படும் வாகனங்கள் தூக்கிச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாசலல்கள் மற்றும் வைத்திய உதவி
வாகனங்கள் வரும் வழிகளை மறைக்காமல் அனுமதிக்கப் பட்டுள்ள இடங்ககளில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு
கேவலார் நகர நிர்வாகம் கண்டிபாகக் கேட்டுள்ளது.
3. குப்பைகளைப் போடுவதற்குரிய கொள்கலன்களைப் பல இருந்தும் பலர் தமது கழிவுகளை தாம் இருந்த இடங்களிலேயே
விட்டுச் செல்வதைத் தவிர்த்து, அனைத்துக் குப்பைகளையும் அதற்குரிய கொள்கலன்களில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
4. வியாபாரக் கடைகள் மாலை 18.00 மணிக்கு கண்டிப்பாக விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு ஏதுவாக 17.30 மணிக்கு
கடை வாசலுக்குள் நுழைவோர் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேவலார் நகர பாதுகாப்புப் பிரிவாலல் கேட்கப்பட்டுள்ளது. எனவே இதை விற்பனையாளர்களும் பொதுமக்களும் கவனத்திற் கொள்ளவும்.
5. ஆலய வளாகங்களுக்குள் நுழைவோர் தயவுசெய்து அமைதியைக் கடைப் பிடிக்கவும். செபித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு தயவு செய்து இடைஞ்சல் செய்யாதீர்கள். இது குறித்து பணியக உதவியாளர்கள் விடுவிக்கும் வேண்டுகோள்களுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.
6. உங்கள் முகவரி மற்றும், திருபபலி பதிவு செய்தல், தொடுவானம் சாந்தா அல்லது கேவலார் திருத்தலம் பற்றிய விளக்கங்கள் மற்றும் பணியக விடயமான அனைத்துத் தேவைகளுக்கும் பணியகத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.