வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)




யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஒழுங்கமைப்பில் நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்களின் தவக்கால சிறப்பு இறை தியான வழிபாடுகள்.

ஜெர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் தவக்காலத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இறைத்தியான வழிபாடுகளில் சகோதரர் நிக்கலஸ் கிஷோக் (கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் இலங்கை) அவர்களும், அருட்தந்தை நிரூபன் தார்சீயஸ் அவர்களும், இணைந்து செய்யப்படவுள்ள சிறப்பு வழிபாடுகளில் திருப்பலியும், இறை வார்த்தை பகிர்வும், நற்கருணை ஆராதனையும், மற்றும் ஆசீர்வாதமும் பிரதான நகரங்களில் நடைபெற உள்ளன. [2024-02-01]


36வது ஆண்டு நிறைவில் கேவலார் அன்னையின் பெருவிழா 12-08-2023

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! [2023-07-21]


யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா – 27.05.2023

பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 27-05-2023 அன்று எசன் நகரில் முழு இரவு ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா மாலை 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. [2023-05-13]


35வது ஆண்டு நிறைவில் கேவலார் அன்னையின் பெருவிழா 13-08-2022

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! [2022-07-23]


யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா - 2022

பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 04-06-2022 அன்று எசன் நகரில் முழு இரவு ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா மாலை 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. [2022-05-10]


பணியகத்தின் ஆரம்பகால பணியாளர் திரு.கி.பரிமளராஜா அவர்கள் இறைபதம் அடைந்தார்.

அன்புக்குரியவர்களே, எமது யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் Meschede பணித்தள பங்குமகனும் மற்றும் நமது ஆன்மீக பணியத்தினால் வருடாந்தம் நடாத்தப்டும் கோவலர் திருயாத்திரைகளை சிறப்புற செய்வதற்கு நீண்டகாலமாக எமக்கு உறுதுணையாகவும் மேலும் திருயாத்திரைகளின் போது விற்பனைநிலையங்களுக்கு பொறுப்பு வகித்தவருமான திரு.கி.பரிமளராஜா அவர்கள் 13.03.2022 இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். [2022-03-15]


பணியகத்தின் மூத்த நீண்ட நாள் பணியாளர் அன்ரனி அமிர்தநாதர் அவர்கள் இறைபதம் அடைந்தார்.

அன்புக்குரியவர்களே, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யேர்மன் - ஒஸ்னாபுறூக் இடத்தை வாழிடமாகவும் கொண்ட, எமது யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஒஸ்னாபுறூக் (Osnabrück) பங்கைச் சேர்ந்த, முன்னாள் தொடர்பாளரும், அருட்தந்தை இன்பநாதன் அடிகளார் அவர்களின் அன்புத் தந்தையும், இப்போதைய உதவித் தொடர்பாளருமாகிய அமலா டில்சாந் அவர்களின் அன்புத் தந்தையுமாகிய அன்ரனி அமிர்தநாதர் அவர்கள், இன்று காலை 3 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை மிகவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். [2022-01-27]


நேரலையில் கேவலார் திருத்தல திருயாத்திரை

தற்போது நிலவும் அசாதாரான நிலைமை காரணமாக கேவலார் திருயாத்திரை மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் அதிகமான மக்கள் பங்கெடுக்க கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வெள்ளிக்கிழ்மை மாலை 06:00 மணிக்கு நற்கருணை ஆராதனையும், சனிக்கிழமை 09:00 மணி, 11:00 மணி, 13:00 மணி, 14:45 மணி, 16:30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும். இவவழிபாடுகளில் ஏற்கனவே பதிவு செய்த மக்கள் மாத்திரமே நேரடியாக பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனினும் ஏனைய எல்லா மக்களும் விடுகளில் இருந்த படி இவ் வழிபாடுகளில் பங்கு பெறுவதற்கான ஒழுங்குகள் பணியகத்தினால் மேற்கொள்ள பட்டுள்ளது. இவ எல்லா வழிபாடுகளும் நமது பணியக You-Tube இல் நேரலையாக ஒளிபரப்பாகும். எனினும் நீங்கள் வீடுகளில் இருந்த படி முழுமையாக வழிபாடுகளில் பங்கெடுத்து, ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்ட்டப்படுகின்றீர்கள். [2021-08-01]


நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திரு. ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் காலமானார்

நமது பணியகத்தின் மூத்த பணியாளரும் பணியக அருட்பணிப் பேரவையின் உறுப்பினருமான திரு.ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் 31-05-2021 அன்று தனது 50 ஆம் வயதில் விண்ணக வாழ்வுக்கு ஆண்டவர் இயேசுவினால் அழைக்கப்பட்டு விட்டார், என்று செய்தியை உங்களுக்கு மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றோம். திரு.ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் பிராங்க்போர்ட் பணித்தளத்திலும் பணியகத்தின் பல பணிகளில் தன்னை இணைத்து நீண்டகாலமாக ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப்பணியில் பணியாற்றியவரார். குறிப்பாக நமது பணியகத்தினால் நடாத்தப்பட்டு வரும் வானொலியில் நாளந்தம் இன்றைய புனிதர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. [2021-06-04]


நேரலையில் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா - 2021

பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 22-05-2021(சனிக்கிழமை) அன்று முழு இரவு நேரலை ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா இரவு 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. அதிகாலை 05:30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமைக்குரிய திருப்பலியும் நேரலையில் இடம்பெறும்.

[2021-05-13]


நேரலையில் கேவலார் திருத்தல திருயாத்திரை

தற்போது நிலவும் அசாதாரான நிலைமை காரணமாக கேவலார் திருயாத்திரை வழமைபோல் இடம் பெறாது. எனினும் எல்லா மக்களும் விடுகளில் இருந்த படி திருத்தல திருயாத்திரையில் பங்கு பெறுவதற்கான ஒழுங்குகள் பணியகத்தினால் மேற்கொள்ள பட்டுள்ளது. இதன் பிரகாரம் வழிபாடுகளை நெறிப்படுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட, ஏற்கனவே அனுமதிக்கபட்டுள்ள ஒரு சிலருடன் திருவிழா வழிபாடுகள் இம்முறை நடைபெறும். எனினும் நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்த படி முழுமையாக வழிபாடுகளில் பங்கெடுத்து, ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்ட்டப்படுகின்றீர்கள். [2020-08-01]